பக்கம் எண் :

                 சிரித்துக் கொண்டே இருந்த எங்கள்
                    சின்னத் தம்பியும்
                
திடுதிப் பென்று குரலெடுத்துக்
                    கதற லாயினன்!
                
அருமைத் தம்பி வீல்வீ லென்றே
                    அழுத காரணம்
                
அறிந்தி டாமல் ஐந்து நிமிடம்
                    விழிக்க லாயினேன்.

               
 சிறிது நேரம் அழுத பின்னர்
                    எங்கள் தம்பியோ
              
  சிரித்துக் கொண்டே கையை மேலே
                    காட்ட லாயினன்.
                
அருமை யாகக் காட்டு கின்ற
                    பொருளைக் கண்டதும்
                
அறிந்து கொண்டேன் கார ணத்தை
                    அந்தச் சமயமே.

               
 என்ன அந்தக் கார ணம்தான்
                    என்றா கேட்கிறீர்?
                
எடுத்து நானும் கூறு கின்றேன்;
                    கேட்டுக் கொள்ளுவீர்.      
                
சின்னத் தம்பி படுத்துக் கொண்டு
                    மேலே பார்க்கையில்
               
 தெரிந்த தங்கே முழுமை யான
                    வெண்ணி லாவுமே!

 
170