பக்கம் எண் :

               அழகு மிக்க நிலவைக் கண்டு
                 
மகிழும் வேளையில்
               அங்கே வந்த மேகக் கூட்டம்
                 
அதை மறைத்ததால்,
               அழுது விட்டான் சின்னத் தம்பி
                  
ஏங்கி ஏங்கியே!
               அழுத பிள்ளை சிரித்த தேனோ?
                 
 அதையும் சொல்லுவேன்;

               மறைந்தி ருந்த மேகம் பின்னர்
                  
கலைந்து போனதால்
               வானில் நிலா முன்பு போலத்
                  
தெரிய லானது!
               மறைந்த நிலவை வானில் மீண்டும்
                 
 கண்ட தம்பியின்
               மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
                  
திரும்பி வந்ததே!

 
171