பக்கம் எண் :

                    விமலா :    

வாய்தி றந்து ஏதோ வார்த்தை           

                        சிரித்து வருகுது!

              மல்லி கைப்பூ அதோ, அதோ

                        சொல்ல வருகுது!

 

                 மல்லிகைப் பூ :

 

                                மல்லி கைப்பூ என்ற வுடனே
                   
மணம ணக்குமே.
             மக்க ளுடைய உள்ள மெல்லாம்
                  
 மயங்கி நிற்குமே.
             உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
                   
என்னை அணிவரே.
             உருவம் சிறிதே ஆன போதும்
                   
உயர்ந்த வள்நானே !

             முத்து வடிவம் கொண்ட என்றன்
                   
உடலைப் பாருங்கள்.
             வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
                   
நிறத்தைப் பாருங்கள்.
             இத்த லத்தில் மலர்க ளுக்குள்
                   
சிறப்பு மிக்கவள்
             என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
                   
இல்லை, இல்லையே !

 
178