பக்கம் எண் :

கமலா :


  
குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
      
அதோ வருகுது!
   கோபு ரத்துக் கலசம் போல
        
அதோ வருகுது! 


தாமரைப் பூ :


                 
சின்னப் பூவே மல்லிகை,
                        என்ன பேச்சுப் பேசினாய்?
                  என்னைப் போல ஒருத்தியை
                        எண்ணிப் பார்க்க வில்லையோ?


                 
தண்ணீர் மேலே நிற்பவன்
                        தட்டைப் போல விரிபவள்
                  கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
                        கடவுள் பூசைக் குரியவள்!


                 
சிறப்பு மிக்க கலைமகள்
                        செல்வம் நல்கும் திருமகள்
                  இருவர் என்மேல் இருப்பரே.
                        என்போல் உண்டோ சொல்லடி?

 
179