பக்கம் எண் :

 

விமலா :


தங்க நிறத்து அரளி அதோ
    குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
    நெருங்கி வருகுது?

 

 

அரளிப் பூ :


மல்லி கையே! தாமரையே!
   என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
   கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
   பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
    தெரிந்து கொள்ளுங்கள்.
 


                   அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
                        நிற்கும் என்னையே
                   தங்க அரளி என்றே மக்கள்
                        புகழ்ந்து கூறுவார்.
                   இங்கே உள்ள மலர்க ளுக்குள்
                        நானே சிறந்தவள் !
                   எதிர்த்துப் பேச எவருக் கேனும்
                        துணிச்சல் உண்டோடி?
 

 
180