கமலா :
அதோ, அதோ சாமந்தியும் அருகில் வருகுதே! அதுவும் இந்தச் சண்டையிலே குதிக்கப் போகுதோ?
சாமந்திப் பூ :
மல்லிகை, தாமரை, தங்கரளி -
உங்கள் மகிமையைக் கேட்டுச் சலித்து
விட்டேன். இல்லாத நில்லாத பெருமை
யெல்லாம்-நீங்கள் ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?
தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன் தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன். மங்கல காரியம் யாவிலுமே-என்னை மக்கள் மறப்பதே இல்லையடி. ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள் உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர். ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம் அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர். என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க ஏழை எளியவர் யாவருமே. பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப் பூக்களில் சிறந்தவள் யாரடியோ?