பக்கம் எண் :

                   விமலா :

                 
ஆகா ! ஆகா ! அதோ பார்.
                     அழகு ரோஜா மலரைப் பார் !
                  வேக மில்லை, கோப மில்லை,
                     மெல்ல மெல்ல வருகுது பார்!


        
           கமலா :


                 
பட்டுப் போன்ற மலர்இது
                     பையப் பைய வருகுது.
                  தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
                     தூண்டு கின்ற மலர்இது!


                   
 விமலா :

 

                மலர்க ளுக்குள் அரசியாய்,
                    மணம் பரப்பும் மலரிது!
                உலக முழுதும் போற்றிடும்
                    உயர்ந்த ஜாதி மலரிது!

                     
கமலா :


               
தெய்வத் திற்குச் சூட்டலாம்;
                     திரும ணத்தில் அணியலாம்;
                கையில் ஏந்தி நுகரலாம்;
                     களிப்பை ஊட்டும் மலரிது!


                     
விமலா :


                
நேரு வுக்குப் பிடித்தது;
                       நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
                  பாரில் இதனைப் போலவே
                        பார்த்த துண்டோ ஒருமலர்!


                      
கமலா :


                 
இல்லை இல்லை, ரோஜாவும்
                        ஏதோ பேசப் போகுதே!


                      
விமலா :

                   
நல்ல தைத்தான் பேசிடும்;
                          நாமும் அதனைக் கேட்கலாம்.

 
182