பக்கம் எண் :

ரோஜாப் பூ :


                    
அருமைப் பூவே, மல்லிகையே!
                          அழகுப் பூவே, தாமரையே!
                     பெருமை யூட்டும் தங்கரளி!
                          பிரிய மான சாமந்தியே!


                   
 உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
                          உள்ளம் மிகமிக வாடியதே.
                     இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
                          ஏனோ மறந்தீர், தோழியரே?


                    
வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
                          வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
                     எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
                          இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.

                    
கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
                          காட்சி அளித்து விளங்குகிறோம்.
                     வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
                          வாரித் தேனை வழங்குகிறோம்.


                    
திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
                          சிறந்திட நாமும் உதவிடுவோம்.
                     நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
                          நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.

 
183