பக்கம் எண் :

                 என்னை விரும்பி அணிபவராம்-நேரு
                        இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
                 சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
                        சாந்த வழியிலே சென்றவராம்.
                 சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
                        தங்கத் தலைவரின் சொற்படிநாம்
                 சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
                        சாந்த வழியிலே சென்றிடுவோம்.

 


பூக்களின் குரல் :


               
சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
                        சாந்த வழியிலே சென்றிடுவோம்.
 

கமலாவும் விமலாவும் :

 

                 - நாமும்

                 சாந்த வழியிலே சென்றிடுவோம்.
                         சாந்த வழியிலே சென்றிடுவோம்.

(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)

 

 
184