ஓடுவது ஏன்?
எலியே, எலியே, ஓடுவதேன்?
என்னைப் பூனை துரத்துவதால்.
பூனையே, பூனையே, ஓடுவதேன்?
பொல்லா வெறிநாய் துரத்துவதால்.
நாயே, நாயே, ஓடுவதேன்?
நாலடிச் சிறுவன் துரத்துவதால்.
சிறுவா, சிறுவா ஓடுவதேன்?
சிறுத்தை பின்னால் துரத்துவதால்.
சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்?
சிங்கம் என்னைத் துரத்துவதால்.
சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்?
எங்கோ வேட்டுக் கேட்டதனால்! |