பக்கம் எண் :

                    பூக்கள் போட்ட பட்டுத் துணியை
                         அள்ளிக் கொண்டது.
                    பிடிக்க வந்தால் ‘உர்உர்’ என்று
                         கடிக்க வந்தது.


                  
 வேல மரத்தில் ஒருகுரங்கு
                         ஏறிக் கொண்டது.
                    வேண்டு மட்டும் முள்ளை யெல்லாம்
                         திரட்டி வந்தது.


                   
காலின் அருகே நாலுகுரங்கு
                         நின்று கொண்டன.
                    கர்ணம் போட்டு இரண்டு குரங்கு
                         முதுகில் ஏறின.


                   
ஒட்டைச் சிவிங்கி உடம்பில் துணியைப்
                         போர்த்தி விட்டன.
                    ஒழுங்கு பார்த்து மீதித் துணியைக்
                         கடித்துக் கிழித்தன.

 
194