பக்கம் எண் :

              சந்தைக்குப் போனேன்

              சந்தைக்குப் போனேன்; சந்தைக்குப் போனேன்
                    சாம்பல் பூசணி வாங்கிடவே.
              சண்டைக்குப் போனேன், சண்டைக்குப் போனேன்
                    தாய்த்திரு நாட்டைக் காத்திடவே.

             
வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் பார்த்தேன்
                    வேலுச் சாமி கடையினிலே.
              வெள்ளத்தைப் பார்த்தேன்; வெள்ளத்தைப் பார்த்தேன்
                    விடாது பெய்த மழையினிலே.


             
தவளை பார்த்தேன்; தவளை பார்த்தேன்
                    தரையில் தத்திச் செல்கையிலே.
              தவலையைப் பார்த்தேன்; தவலையைப் பார்த்தேன்
                    தங்கை தூக்கி வருகையிலே.


             
கொல்லையில் கிடைத்தது; கொல்லையில் கிடைத்தது
                    கொத்துக் கொத்தாய் மல்லிகையே.
              கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் கிடைத்தது
                    கொடியவ னுக்குத் தண்டனையே!

 
199