பக்கம் எண் :

         அண்ணன் : கண்ணா, மாடி அறைக்குள்ளே
                    கறுத்த அட்டைப் பெட்டியிலே,
                    காசுகள் நிறைய வைத்துள்ளேன்.
                    கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய்.
                    சரியாய்ச் சொன்னால், அத்தனையும்
                    தருவேன் உனக்கு, உனக்கேதான்!
                    சீடை முறுக்கு வாங்கிடலாம்;
                    தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.


       
 கண்ணன் : அண்ணா, அண்ணா, இப்பொழுதே
                    அத்தனை படியும் ஏறிடுவேன்.
                    எட்டிப் பாய்ந்து பெட்டியிலே
                    இருக்கும் பணத்தை எண்ணிடுவேன்.
                    சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்.
                    சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
                    ஆசை தீரத் தின்றிடுவேன்.
                    அண்ணன் சொல்லைத் தட்டுவதா?

 

 
198