அண்ணன் :
கண்ணா, மாடி அறைக்குள்ளே
கறுத்த அட்டைப் பெட்டியிலே,
காசுகள் நிறைய வைத்துள்ளேன்.
கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய்.
சரியாய்ச் சொன்னால், அத்தனையும்
தருவேன் உனக்கு, உனக்கேதான்!
சீடை முறுக்கு வாங்கிடலாம்;
தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.
கண்ணன் :
அண்ணா, அண்ணா, இப்பொழுதே
அத்தனை படியும் ஏறிடுவேன்.
எட்டிப் பாய்ந்து பெட்டியிலே
இருக்கும் பணத்தை எண்ணிடுவேன்.
சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்.
சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
ஆசை தீரத் தின்றிடுவேன்.
அண்ணன் சொல்லைத் தட்டுவதா?
|