பக்கம் எண் :

        தேர்வடம் பிடித்துச்
        செல்வது போலே

       
இருக்கும் அந்த
        இனியநல் காட்சி!


        சர்க்கரைச் சாமி
        சாலையின் குறுக்கே

       
சிற்சில சமயம்
        செல்லுவ துண்டு

        சாலையைக் கடக்கச்
        சரியாய் அரைமணி

       
ஆகும். அதனால்
        அடடா, அடடா!


        அனைவரும் அங்கே
        அவதிப் படுவர்

       
எதிர்எதிர்த் திசையில்
        எத்தனை கார்கள்!


        எத்தனை வண்டிகள்!
        எத்தனை மனிதர்கள்!

       
‘பாம்பாம்’ சத்தம்
        பலமாய்க் கேட்கும்


        ‘கிணிங் கிணிங்’ எனவே
        மணிகள் ஒலிக்கும்.

 
202