“எத்தனை நேரம்
இப்படி நிற்பது?”
என்பார் பலபேர.்
எனினும் சிலபேர்,
தாடியின் மேலே
தாண்டிச் செல்வர்;
தாடியின் கீழே
தவழ்ந்தும் போவர்.
குழந்தைக ளெல்லாம்
குடுகுடு என்றே
தாடியின் அடியில்
ஓடிடு வார்கள்.
சர்க்கரைச் சாமி
தாடியின் மகிமை
எடுத்துக் கூறிட
எவரும் முயன்றால்,
தாடிபோல் அந்தச்
சரித்திரம் நீளும்.
வேண்டாம். இத்துடன்
விடைபெறு கின்றேன்.
|