பக்கம் எண் :

                       தம்பி
          
 தெப்பக் குளத்தங் கரையிலே
           
தேடிப் பார்த்தும் இல்லையேல்...?
                       அண்ணன்

           
சுப்ர மணியர் கோயிலைச்
           
சுற்றி வருவார்; அழைத்துவா.
                       தம்பி

            சுப்ர மணியர் கோயிலைச்
           
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...?
                       அண்ணன்

            கப்பல் காரன் தெருவிலே
          
 கடையில் இருப்பார்; அழைத்துவா.
                       தம்பி

            கப்பல் காரன் தெருவிலே
           
கடையில் பார்த்தும் இல்லையேல்...?
                       அண்ணன்

            சும்மா திரும்பி வந்திடு.
           
துரித மாகச் சென்றிடு.
                       தம்பி

            சும்மா திரும்பி வரவாநான்
           
இம்மாந் தூரம் அலைவது?
            அம்மா டியோ! இங்குநான்
           
நிம்மதி யாய்த் தூங்குவேன்.

 

‘குப்புசாமி-அப்புசாமி’ பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில்
காணலா
ம்

 
205