குழந்தைக் கவிஞரின்
படைப்பும் பணியும்
பிறப்பு
: 7-11-1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம்.
பெற்றோர் :
அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி.
கவிதை எழுதத் தொடங்கியது : 13-வது வயதில்.
‘சக்தி’யில் பணி :
1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில்
பொருளாளராகச் சேர்ந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின்
ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார்.
இந்தியன் பாங்கில் பணி :
1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின்,
காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஓய்வுபெற்றார்.
புத்தகங்கள் :
இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களை
எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாட்டிலே காந்தி கதை
தமிழக அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி)
கவிதைகள்
2.
பாப்பாவுக்குப் பாட்டு
3. நல்ல நண்பர்கள்
(கதை)
4. பெரியோர்
வாழ்விலே
5. சின்னஞ் சிறு
வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
6. பிள்ளைப்
பருவத்திலே
குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர்
:
1950-ல்
குழந்தைகளுக்காக
எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர்
சங்கத்தை நிறுவியவர்.
பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர்.
தற்போது இதன் தலைவர்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் :
தமிழ் எழுத்தாளர் சங்கத்தில்
பல்வேறு பதவிகளை வகித்து
1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
|