பக்கம் எண் :

    ஆண்டவன் தந்த கை


                    
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                   
 அள்ளிச் சோறு தின்பதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                    
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                    
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                    
அழகாய் எழுதிப் படிப்பதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                   
 அனுதினம் வேலை செய்வதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                    
அனைவருக் குதவி செய்வதற்கு.

                     ஆண்டவன் தந்த கை எதற்கு ?
                   
 அவரை நன்றாய்த் தொழுவதற்கு.

 
31