பக்கம் எண் :

அன்னம்


                   
பாலைப் போன்ற வெள்ளை நிற
                         அன்னத்தைப் பாராய்-அது
                    படகு போலே அசைந்தி டாமல்
                         நீந்துது பாராய்.


                   
நீள மாக வளைந்தி ருக்கும்
                         கழுத்தி னைப் பாராய்-அதோ
                    நீரில் தலையை விட்டு மீனைப்
                         பிடிக்குது பாராய்.


                   
அன்னை முதுகில் ஏறிச் செல்லும்
                         குஞ்சுகள் பாராய்-அவை
                    அச்சம் வந்தால் சிறகுக் குள்ளே
                         ஒளிவதைப் பாராய்.


                   
கன்னங் கரிய நிறத்தில் கூட
                         அன்னம் இருக்குதே!-அதைக்
                    காண லாமே மிருகக் காட்சி
                         சாலை தன்னிலே !

 
44