கண்ணன்
வீட்டுத்
தோட்டம்
கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே
வண்ண வண்ண மலர்கள் உண்டு.
வண்ண மலர்கள் கூட்டத்திலே
வாச னைகள் அதிகமுண்டு.
வாச னையை அறிந்துகொண்டு
வண்டு தேடி வருவதுண்டு.
வண்டின் பசியைத் தீர்த்திடவே
மலர்கள் தேனைத் தருவதுண்டு.
மலர்கள் தந்த தேனைஉண்டு
வண்டு சுற்றி வருவதுண்டு.
வண்டு சுற்றிச் சுற்றிவந்து
வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு.