பக்கம் எண் :

     கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே
        
கண்ணன் வருகிறான்.
     கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
        
கண்ணன் வருகிறான்.

     பையப் பைய நடந்து நடந்து
        
கண்ணன் வருகிறான்.
     பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே
        
கண்ணன் வருகிறான்.

   
 ஃ               ஃ               ஃ

     கண்ணன் எதையோ பின்புறம்
       
கையில் வைத்து மறைக்கிறான்.
     என்ன வாக இருக்குமோ?
       
எட்டிப் பார்த்தேன், ஆவலாய்.

     எட்டி எட்டிப் பார்த்துமே
       
எனக்குத் தெரிய வில்லையே !
     சுற்றி வந்தேன் கண்ணனை.
       
சுற்றி அவனும் ஏய்த்தனன் !

     மாயக் காரன் கைகளை
       
மறைத்து மறைத்து வைத்ததால்,
     ஓய்ந்து போனேன். கடைசியில்
       
உயரே கையைத் தூக்கினான்.

     கண்ணன் கையில் இருந்ததைக்
       
கண்ட வுடனே நானுமே
     கொண்டேன் மிகவும் இன்பமே

      
குதிக்க லானேன், மகிழ்ச்சியில் !

 
78