பக்கம் எண் :

                 ‘உண்மை, அகிம்சை, இரண்டும் நமது
                     கண்கள்’ என்னும் தாத்தா.
                
‘உயிர்கள் யாவும் உறவு’ என்றே
                     உணர்த்தும் காந்தித் தாத்தா.

                
உழைத்தி டாமல் உண்ணு வோரைத்
                     திருடர் என்பார் தாத்தா.
                
உலகில் உள்ள இருளைப் போக்கும்
                     ஒளியாய் வந்த தாத்தா.

               
 நமது நாட்டின் சுதந்தி ரத்தைப்
                     பெற்றுத் தந்த தாத்தா.
                
நாமெல் லாரும் வாழும் வழியைக்
                     கற்றுத் தந்த தாத்தா.

 

 
90