பக்கம் எண் :

                 என் கடிதம்


                
அருமை மிக்க நண்ப னுக்குக்
                   
கடிதம் எழுதவே
                 ஆசை யாக வெள்ளைத் தாளை
                   
எடுத்துக் கொள்ளுவேன்.

                 ‘அன்பு மிக்க சோமு வுக்கு,’
                    
என்று தொடங்குவேன்.
                 அச்ச டித்த எழுத்தைப் போல
                   
அழகாய் எழுதுவேன்.

                 ‘வணக்கம்’ என்றே அடுத்த வரியில்
                   
தனியாய் எழுதுவேன்.
                  வரிசை யாகத் தகவல் யாவும்
                   
புரியக் கூறுவேன்.

                 ஆசை யாகக் கடிதம் தன்னை
                   
எழுதி முடித்ததும்
                 ‘அன்பு நண்பன்,’ என்றே எழுதி
                   
அதற்கும் அடியிலே,

 
95