ஆலயம்
செல்லுகின்றேன்-சுடரொளி
அங்குநான் ஏற்றுகின்றேன்;
வாலிப ஆசையோடு குருக்களோ
வார்த்தைகள் ஆடுகின்றார்!
அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில்
அங்குநான் செல்வதுண்டு,
சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின்
தூங்கவோர் கட்டிலுண்டு!
சின்னஞ் சிறு கிளியே-உலகமிச்
செய்தி அறிந்துவிடின்,
என்னைப் பழித்திடுமோ?-இழிமொழி
எல்லாம் உனக்கலவோ?
வெள்ளிப் பகற்பொழுதில்-நகைக்கடை
வீதியில் செல்லுகின்றேன்;
அள்ளி எனையணைத்தே -மகிழ்ந்திட
அள்ளி வழங்குகின்றார்!
அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில்
அங்குநான் செல்வதுண்டு,
சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின்
தூங்கவோர் கட்டிலுண்டு!
சின்னஞ் சிறு கிளியே-உலகமிச்
செய்தி அறிந்துவிடின், என்னைப்
பழித்திடுமோ?-இழிமொழி
எல்லாம் உனக்கலவோ? |
|
|
|