நங்கையை
என்னுளம் நாடுவ தாலும்
நுணுக்கமாய் இவளெனை நோக்குவ தாலும்
மங்கையோ? இந்த நங்கை யாரென்
றையங் கொண்டே என்னுளம்
மையல் வண்டென மயங்கு கின்றதே! |
சொல்லாதே!
|
(சிந்து)
|
தென்றலின்
தங்கையவள்-செந்
தேனின் கலசமவள்!
கன்னியோ அஞ்சுகின்றாள்-கருங்
கடலே கனைக்காதே!
குளிர்பிறை போன்றவளாம்-மலர்க்
கொத்தினை ஒத்தவளாம்!
கிளிமகள் அஞ்சுகின்றாள்-அல்லிக்
கேணியே பொங்காதே!
உறவில் உறங்குபவள் -நிலவே
உன்னைக்கண் டஞ்சுகின்றாள்!
மறைவில் நடப்பவற்றை-நீ
மாந்தர்க்குச் சொல்லாதே! |
நாடகப்பத்தினி
|
நாடகப்
பத்தினிநான்- குளிர்நதி
நாட்டின் விலைமகள்நான்!
வாடகைச் சத்திரம்நான்-சுகம்பெற
வந்தால் கிடைத்திடும்தேன்! |