பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 241

பசும ரங்களில் தெய்வ முண்டெனப்
       பழைய முன்னவர் போற்றினார்
இசைமி குந்திட ஆயுள் நீண்டிட
       இன்ப இல்லறம் ஆற்றினார்
வசையொ ழிந்திட நாமும் அப்படி
       வனம ரங்களை எண்ணுவோம்
திசைய னைத்திலும் புகழ்ச்சி றந்திடத்
       தீர வாழ்க்கையும் பண்ணுவோம்.       6

வாழ்க இத்திரு வாரம் முழுவதும்
       மரம்வ ளர்ந்திட நட்டவர்
வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற
       வரையில் நீர்தினம் விட்டவர்
வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும்
       வான ளாவிடும் சோலைகள்
வாழ்க சத்திய சாந்த நல்வழி
       வந்த இந்தச் சுதந்தரம்.