கூடுவிட்டுக் கூடுபாயும் சித்துசெய்யக் கோரியும் கோடிகாலம் வாழ எண்ணிக் காயகற்பம் தேரியும் தேடுகின்ற உண்மையாவும் ஓடி வந்து நிற்குமே தெய்வவாக்கு வள்ளுவன் திருக்குறள்கள் கற்கவே. 4 அன்புதந்த அருள்விளக்கி அறிவுசொல்லும் அறமொழி ஆன்மஞானம் என்றுசொல்லும் அதையும்சேரப் பெருவழி துன்பமென்ற உலகவாழ்வில் துயரம்ஏதும் வந்திடில் துணைபுரிந்தே அருகிருந்து தோதுசொல்லும் மந்திரி. 5 இன்பம்என்று தவறுசெய்து நோய்கள்சேரக் கண்டதும் இடைபுகுந்து மாற்றுரைத்தே இடரைநீ்க்கும் பண்டிதம். தென்புமிக்க தூயவாழ்வின் தெளிவுகாட்டும் வண்பதாம் தெய்வஞான வள்ளுவன் திருக்குறள்கள் என்பவாம். 6 34. காத்திடலாம் தமிழ் மொழியை சீர்சிறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச் சித்திரையில் தொடங்குகிற திறத்தால் இன்று பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர் பசுவினுக்கும் சமதர்மம் பரிவாய்ச் செய்தான்! |