|           
					14. சுவடியின் மரவு தெரிவுறு காதை | 
                  | 
			கூடலில் மீனவன் பணி | 
                  |  | 
                  |   | ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்! தீங்கொன் றுற்றது 
		செப்புவென் கேண்மோ!
 கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,
 நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம்,
 |  | 
                  |  | கள்ளின் சுவைதரு காவியம் முதலன | 5 | 
                  |  | வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்; அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்
 செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியன
 பயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்;
 |  | 
                  |  |  |  | 
                  |  |           
							மாணவன் ஐயம் |  | 
                  |  |  |  | 
                  |  | செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை | 10 | 
                  |  |  |  | 
                  |  | `இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல் நசையுறும் 
					ஓவியம் நவில்நூல் உளவோ?
 ஒருநூ லாயினும் உருவொடு 
					காண்கிலேம்;
 எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்;
 |  | 
                  |  |  |  | 
                  |  |           
					தமிழின் பகைகள் |  | 
                  |  |  |  | 
                  |  |                     
					மனநலி வுற்று மற்றவற் குரைப்போன்                  | 15 | 
        |  | `பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி நிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை;
 நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன;
 உருக்குலைந் தொழிந்தன ஓங்குயர் நூல்பல;
 |  | 
                  |  | ஆடிப் பெருக்கில் ஆற்றொடு விடுத்தனம்; | 20 | 
                  |  | தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள் எஞ்சின 
						ஒருசில! நஞ்சினுங் கொடியர்
 வஞ்சினங் கொண்டென 
						அழித்தனர் மாய்த்தனர்;
 |  | 
                  |           
						--------------------------------------------------------------- | 
                  |  | கேட்குநர் - கேட்பவர், நோக்குநர் - காண்பவர். செரு - போர், |  | 
                  |  |  |  |