தங்கத் தேவனிடம் ஏமகானன் முறையிடல் |
|
| மின்பொறித் தாக்குதல் மெய்யுற் றான்போல் பின்புறம் நோக்கிலன் பேசா நாவினன் | |
| ஏகினன் வடபுல ஏம கானன்; | 130 |
| போகிய அவ்விசைப் புலவன் தானுறை தங்கத் தேவன் தன்மனை குறுகிச் `சிங்கம் என்னையிச் சிறியோன் பழித்தனன்; என்னிசை இகழ்ந்து தன்னிசை புகழ்ந்தனன் | |
| நின்னுரை கேட்டேன் நெளிந்ததென் மானம்! | 135 |
| எந்நகர்ச் செலினும் எற்பணிந் தேற்றனர்; இந்நகர் ஒன்றே இகழ்வுரை தந்தது; தங்கத் தேவ! தலைகவிழ் நிலையில் தொங்கச் செய்தனை! துளைத்தனை நெஞ்சம்' | |
| செங்கண் சிவக்கச் செப்பினன் இவ்வணம்; | 140 |
| | |
| தங்கத் தேவன் கொதிப்புரை | |
| | |
| `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி! வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில் இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல் | |
| விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்; | 145 |
| மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச் செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்; கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்; | |
| தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்; | 150 |
| யாவரும் என்பெயர் கேட்டால் நடுங்குவர், பிறப்பால் இழிந்தோன் எதிர்த்துனைப் பேசினன்! இறப்பே அவன்இனி எய்துதல் வேண்டும்'என் றழுக்கா றுள்ளம் அயலவன் சினமும் | |
| இழுக்குறு செயல்செய எழுந்தன; ஒருநாள் | 155 |
--------------------------------------------------------------- |
| குறுமகன் - சிறியவன், தேவபாடை - ஆரியமொழி. | |
| | |