மீனவன் தாக்குறலும் - வேறிடம் சேறலும் |
|
| அருகமை சிற்றூர் ஆண்டு விழாவில் பெருமழை என்னச் சொன்மழை பொழிந்து வருமவன் மீனவன் வண்டியை இருளில் ஊர்க்குறு மாக்கள் தாக்கினர்; அவனைத் | |
| தீர்த்திட எண்ணித் தீட்டிய வாளால் | 160 |
| வெட்டினர்; ஆனால் விளைந்தது வேறு! கட்டிளங் காளையர் தட்டுவண்டி யோட்டிக் கொட்டி முழக்கிக் கூஉய்வரல் கேட்டு விட்டுவிட் டோடினர் விலங்குச் செயலோர்; | |
| வந்த காளையர் வாரி யணைத்து | 165 |
| நொந்த உடலின் நோவினை அகற்றிக் கூடல் நகரிற் கொண்டுய்த் தனரே; `வேடன் கட்படு வெண்புற வானேன்! பாடும் தமிழைப் பரப்புதல் பழியோ? | |
| கூடி எங்கும் கொலைசெய் மாக்கள் | 170 |
| தேடி அலையத் தொடங்குதல் கண்டேன்; காடும் நாடும் ஒன்றெனக் கண்டேன்; உயிர்ப்பலி உறுதி, ஓரிடம் தரியேன்; செயிர்த்தோர் என்னைச் செகுத்தொழிக் காமுனம் | |
| ஊரூர் ஓடி உயரிசை பரப்பிப் | 175 |
| பாரோர் ஏற்கப் பணிபுரிந் தழிவேன்' என்றம் மீனவன் ஏகினன் விரைந்தே; | |
| | |
| ஏமகானன் தூண்டு மொழி | |
| | |
| தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்; | |
| யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக் | 180 |
| கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்; | |
--------------------------------------------------------------- |
| கட்படு - கண்ணில்படும், செகுத்து - அழித்து, முனம் - முன்பு. | |
| | |