|   |         
                  |   |                                         பிரிவெனும் பெருஞ்சுறா பேழ்வாய் காட்டி |                     70 |         
                  |   |                                         விரைவினில் வந்தெனை விழுங்கிடும் அந்தோ!           இசையொலி பரவிட இன்புறுங் காலை           வசையிலா யாழில் வடிநரம் பறுந்ததே!           கூடி மகிழ்ந்த கூத்தும் இசையும் |                       |         
                  |   |                                         வாடி வதங்கி வாழ்விழந் தனவே! |                     75 |         
                  |   |                                         பண்ணொலி இழந்தது பாடல் அந்தோ!           கண்ணொளி இழந்தது கருவிழி அந்தோ!           கொழுநன் இழந்தேன்! கொழுநன் இழந்தேன்!           உழலும் வாழ்வும் உயிரும் வேண்டேன்!' |             |         
                  |   |                                         எனுமொழி புலம்பி, இனைதுயர் நலியக் |           80 |         
                  |   |                                         கண்படை கொண்டிலள், கருதிலள் உணவைப்           புண்படு நெஞ்சம் பூண்டனள்; அதனால்           பண்ணும் இசையும் பரிவுற் றேங்கக்           கண்ணும் மனமும் கவலை தேங்க; |             |         
                  |   |                                         உயிரும் உடலும் நலிந்து மெலிந்தனள்; |           85 |         
                  |   |                                           |             |         
                  |   |                                                              வானொலிச் செய்தியும் எழிலியின் களிப்பும்  |             |         
                  |   |                                           |             |         
                  |   |                                         `ஊர்பெயர்ந் தேகிய உயர்பெருங் கூத்தன்;           சூர்வளி தாக்கத் தொலைகலப் பட்டோன்;           ஊர்திரை உந்த ஒடிமரம் துணையாக்           கல்லா மாந்தர் கடுங்கண் மறவர் |             |         
                  |   |                               பல்லோர் வாழும் பழுவூர்ப் பாக்கம் |           90 |         
                  |   |                               சார்ந்துளன்' என்று சாற்றிய வானொலி வாய்மொழி கேட்டோர் வந்துடன் புகலத் தழலில் உருகும் நெஞ்சம் தளிர்த்தனள், உயிரும் தளிர்த்தனள், ஊனெலாம் தளிர்த்தனள், |   |         
                  |   |                               பயிரை விளைத்தோன் பயனெதிர் நோக்கும்  |           95 |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                               பேழ்வாய் - திறந்தவாய், கண்படை - உறக்கம், சூர்வளி - புயல், ஊர்திரை - ஊரும் அலை, ஊன் - உடல். |             |         
                  |   |             |             |