| |
| | தொன்று முதிர்ந்த தூயநன் மொழியாம் | 210 |
| | தமிழிசை மீண்டும் தரணியில் தழைக்கத் தந்தநற் சுவடியின் தகவெலாம் உரைத்துப் புந்தியிற் பதியப் பொதிந்துள நுணுக்கம் முறைமுறை தெரித்தும் இடையிடை இசைத்தும் | |
| | நறைபழுத் தொழுகும் துறைத்தீந் தமிழின் | 215 |
| | பழம்பெரும் பாடல் பாங்குடன் பாடியும் முழங்கிசை வல்ல முத்துத் தாண்டவர் வழங்கி யருளிய வளர்தமிழ்ப் பாட்டும், அரும்பெறல் இசைவல அருணா சலக்கவி | |
| | திறம்பட நல்கிய தீந்தமிழ்ப் பாட்டும், | 220 |
| | விரும்பிய சமநிலை வேத நாயகர் தரும்பழச் சுவைநிகர் தண்டமிழ்ப் பாட்டும், என்றிவர் அனையார் இசைத்துறை வித்தகர் துன்றுநல் லுணர்வில் துய்த்துப் பாடிய | |
| | தென்றமிழ்ப் பாட்டும் தெள்ளிதின் இசைக்க, | 225 |
| | | |
| | பெருநிலக்கிழார் வாழ்த்துரை | |
| | | |
| | ஏந்திய மலரில் இன்சுவை நறவம் மாந்திய வண்டென மனங்களி கூர்ந்து விழிபுனல் ததும்பி வியந்துரை கூற மொழிதடு மாறும் முதியவர் எழுந்து | |
| | `வாழிய நெடுநாள்! வாழிய நெடுநாள்! | 230 |
| | யாழின் இசையோய் வாழிய நெடுநாள்! ஏழிரண் டாண்டுகள் என்மனத் துறுத்திய பாழிடர் போக்கினை! பாவாய் வாழிய!' எனமனத் தெழூஉம் உணர்ச்சியின் இயைந்த | |
| | வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர் பெரிதே. | 235 |
| --------------------------------------------------------------- |
| | எழூஉம் - எழும். | |
| | | |