|                   | 21. நூல்நிலையம் அமைத்த காதை |  | 
                  |  | 
                  |  | பூங்கொடி வேண்டல் |  | 
                  |  |  |  | 
                  |  | `வாழிய என்றெனை வாழ்த்திய பெரியீர்! ஏழிரண் டாண்டுகள் இடரொன் றுளதெனக்
 கூறிடக் கேட்டுளம் கொடுந்துயர் உற்றேன்;
 மாறிய தவ்விடர் எனும்அம் மாற்றம்
 | 
 | 
                  |  | தொடுத்துடன் மொழிந்தீர் அடுத்துளம் மகிழ்ந்தேன் | 5 | 
                  |  | படுத்திய அவ்விடர் பாவைநான் உணர எடுத்து மொழிய இயலுமோ பெரும!'
 என்றிளம் பூங்கொடி இரங்கினள் வேண்ட,
 |  | 
                  |  |  |  | 
                  |  | மகள் வரலாறு |  | 
                  |  |  |  | 
                  |  | `நன்று கனிமொழி நவிலுவென் கேண்மோ! |  | 
                  |  | உருவும் எழிலும் உன்போல் ஒருத்தி, | 10 | 
                  |  | பருவம் நிறைமகள், பாவிஎன் மடமகள் உருவளர் முழுமதி ஒப்பத் திகழ்ந்தனள்,
 ஆடலும் பாடலும் அவட்குயிர் ஆகும்,
 ஏடவிழ் கோதை எனக்குயிர் ஆகும்,
 |  | 
                  |  | நாடிய துறையில் நன்கனம் தேர்ந்து | 15 | 
                  |  | பாடுங் குயிலாய், ஆடும் மயிலாய், வீடகம் எல்லாம் பாடகம் சிலம்ப
 ஊடகம் குளிர உவந்து திரிந்தனள்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | மகட் பிரிவு |  | 
                  |  |  |  | 
                  |  | ஒருநாள் |  | 
                  |  | பாட்டியல் வழுவாப் பண்ணொலி அடங்க | 20 | 
                  |  | மீட்டிய யாழும் கூட்டினுள் முடங்க |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | ஏடு - பூவிதழ், நன்கனம் - நன்கு, பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒரு வகை அணி, சிலம்ப - ஒலிக்க, ஊடகம் - உள்மனம். |  | 
                  |  |  |  |