| |
| | உடலும் உயிரும் ஒருங்குடன் நடுங்கப் படரிருள் அகத்தில் பரவிய தந்தோ! சுடரொளி அவிந்தது துயரெனை அணைந்தது, | |
| | தாங்கருந் துயரத் தடங்கடல் மூழ்கி | 25 |
| | நீங்கா உயிர்ப்பொறை தாங்கி நாளெலாம் உண்ணலும் உறங்கலும் எண்ணிலே னாகி மண்ணகத் திருந்து வாழும் காலைக் காலம் என்னும் கோல மருத்துவன் | |
| | ஞாலத் தியற்கை நன்கனம் உணர்த்தி | 30 |
| | மாறா மனப்புண் மாற்றின னாகத் தேறினேன் ஆயினும் சிந்தையில் அவளுரு மாறிய தில்லை; மனத்தவள் விழைந்த | |
| | | |
| | நினைவுச் செயல் | |
| | | |
| | ஆடலும் பாடலும் அளாவிய இன்னொலி | |
| | வீடகம் எதிர்ந்து விரவிட நினைந்து | 35 |
| | நாடொறும் அவ்வொலி நான்செவி மடுக்கத் தேடரும் செல்வம் வாரித் தெளிப்பது தொழிலாக் கொண்டுளேன், தூயவள் நீஎன் விழியிடைப் படலும் மீண்டனள் என்மகள் | |
| | என்னும் உணர்வே என்னுளத் தெழுந்தது; | 40 |
| | | |
| | வேண்டுவது உரை எனல் | |
| | | |
| | புண்ணிய மகளே! பூங்கொடி அன்னாய்! பெண்மையின் உருவே! கண்ணின் மணியே! மாதமிழ்ச் செல்வி! வாழிய நெடிதே! யாதுநீ வேண்டினும் என்பால் உரைத்தி | |
| | தீதென நினையேல் செவ்விதிற் கொள்'கென | 45 |
| | மாதவள் தன்பால் ஓதினர் அக்கிழார்; | |
| | | |
| | பூங்கொடி நன்றி கூறல் | |
| | | |
| | `தகவுடைப் பெரியோய்! தந்தாய் அன்பினை | |
| --------------------------------------------------------------- |
| | அணைந்தது - தழுவியது, பொறை - சுமை, தந்தாய் - கொடுத்தாய். | |
| | | |