| |
| | `ஒருதலைக் காமம் உடையவர் தாமே வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்' என்ற அம்மொழி இன்று பலித்ததோ? | |
| | அன்றது மொழிந்தமைக் கின்று வருந்துவல்' | 55 |
| | என்று பலப்பல இரங்கிப் புலம்பி, | |
| | | |
| | கிழாரிடம் முறையிடல் | |
| | | |
| | உறுதுணை யாகிய பெருநிலக் கிழார்பால் அறைகுவல் விரைந்தே என்றாங் கணுகித் தன்னையும் பண்ணையும் முன்னி வந்தவன் | |
| | பன்னிய செய்தியின் பான்மை முழுவதூஉம், | 60 |
| | மேனாள் தொட்டு மெல்லியல் அவன்மொழி ஏலா தியாவும் எதிர்த்துரை புகன்றதூஉம், காதலின் பெயராற் கரையிலான் இவனால் ஏதம் விளையினும் விளையுமென் றெண்ணிச் | |
| | சண்டிலி சூழ்துணை கொண்டு நின்றதூஉம், | 65 |
| | வண்டென அலைவோன் வாளிற் படுகொலை யுண்டு மனையினில் ஒருபாற் கிடப்பதூஉம், உறுதுணை யாகிய ஒண்டொடி சண்டிலி பெருமனை நீங்கிப் பெயர்ந்து போயதூஉம் | |
| | அரிவை யாவையுந் தெரிதர வுரைத்து | 70 |
| | வருபழி யஞ்சிவாடி நின்றனள்; | |
| | | |
| | கிழாரும் உடன்புறப்படல் | |
| | | |
| | பெருநிலக் கிழார்அப் பேதையைத் தேற்றி `மருளுதல் தவிர்கஎன் மகளே! ஒன்றும் வெருவுதல் வேண்டா, வேண்டுவ செய்வல்; | |
| | வருகுவென் யானும் வஞ்சி நின்னுடன் | 75 |
| | எழு'கெனக் கூறி எழுந்தனர் ஆங்கே; | |
| | | |
| | காவலர் வருதல் | |
| | | |
| | பண்ணும் இசையும் பயில்தரு மாளிகைக் | |
| --------------------------------------------------------------- |
| | அறைகுவல் - கூறுவேன், பன்னிய - கூறிய. | |
| | | |