|   |         
                  |   |                                         மதித்து வாழ்ந்தேன்; மணந்தவள் காதற்           பரிசில் எனஒரு பச்சிளங் குழவி           தருகையில் என்னைத் தணியாத் துயரில் |                       |         
                  |   |                                         உருகிடச் செய்துயிர் ஒடுங்கினள்; யானும் |                     185 |         
                  |   |                                         மறுமணம் புரியா மனத்தினேன் ஈன்ற           சிறுமியின் முகத்துச் சிரிப்பினைக் கண்டு           துயரம் மறந்து துணைவிழி யிமைபோல்           அயர்வொன் றின்றி அவளைப் புரந்தேன்; |                       |         
                  |   |                                         கட்டிளம் பருவங் கண்டனள் அவளும் |                     190 |         
                  |   |                                         விட்டுப் பிரிந்தனள்; வேதனைக் கடலுள்           மூழ்கிக் கிடந்தேன்; முதிராப் பூங்கொடி           ஆழ்துயர் துடைத்தனள், அவளென் மகளென           உறுதி எடுத்தேன் உறுதுயர் விடுத்தேன், |                       |         
                  |   |                                         இறுதி விரைவினில் எய்துவ துறுதி |                     195 |         
                  |   |                                         பெறுநிதி அனைத்துமிப் பேதையின் பணிக்கே           தருவதென் றெண்ணி அறுதியும் செய்தேன்;           காதல் மனையின் பெயர்சொல மறந்தேன்           ஏலங் குழலி' என்றவர் செப்புமுன் |                       |         
                  |   |                                                     |             |         
                  |   |                                                              அருண்மொழி அரற்றுதல்  |             |         
                  |   |                                           |                       |         
                  |   |                                         `ஆ'வென் றலறிய அருண்மொழி மீண்டும் |                     200 |         
                  |   |                                         கூவி யழுதனள்; குறளகத் தலைவர்           அறவுரை கூறி ஆறுதல் தந்தனர்;           செறிதொடி அருண்மொழி செங்கை கூப்பிப்           `பொய்யிலை பொய்யிலை என்மகள் பூங்கொடி |                       |         
                  |   |                                         ஐயநின் மகளே! ஐயநின் மகளே! |                     205 |         
                  |   |                                         மெய்யிது மெய்யிது மேலோய்! நன்மகள்           சேரிடஞ் சேர்ந்தனள், சேல்விழி நின்மகள்'           என்பன கூறி இருவிழி பொழிந்தனள்; |                       |         
                  |   |                                           |                       |         
                  |   |                                                              அடிகள் வினாதல்  |             |         
                  |   |                                           |                       |         
                  |   |                                         முன்புள அடிகள் மென்மொழி விளித்துத் |                       |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                                         அயர்வு - வருத்தம், புரந்தேன் - காத்தேன், முதிரா - முற்றாத,           இறுதி - இறப்பு, அறுதி - முடிவு. |                       |         
                  |   |             |             |