| 28. சொற்போர் நிகழ்த்திய காதை | 
                  | பல்வகை எதிப்பு | 
                  |  | 
                  |   | பூங்கொடி யின்புகழ் யாங்கணும் ஒங்கிடத் தாங்குதல் ஆற்றாத் தரியலர் புழுங்கி
 ஏங்கிய மனத்தொடு எவ்வழி யாயினும்
 ஆங்கவள் வளர்புகழ் அழிப்பான் வேண்டித்
 |  | 
                  |  | தீங்குகள் பலவும் செய்திடுங் குழுவும், | 5 | 
                  |  | தொலைவில் மறைந்து தூண்டுவோர் தூண்ட அலையும் மனத்தினர் ஆடும் பாவைகள்
 நிலையிலாக் கொள்கை கலையெனப் பூண்டோர்
 மலையும் நோக்கினர் மதியிலார் குழுவும்,
 |  | 
                  |  | உண்மை நன்மை ஒன்றும் அறிகிலார் | 10 | 
                  |  | எண்ணும் ஆற்றல் எதுவும் அறிகிலார் மனத்தால் தீமை மதித்தலும் அறிகிலார்
 இனத்தால் நல்லவர் எனினும் அறிவெனும்
 சுடரறி யாமல் சூழிருள் மூழ்கி
 |  | 
                  |  | மடமுறும் மனத்தினர் வஞ்சமில் குழுவும், | 15 | 
                  |  | மெய்ம்மை யுணர மேவுவார் குழுவும், தெய்வப் பணியால் உய்யும் குழுவும்
 கொடுத்திடும் துயரெலாம் குலக்கொடி உதறினள்;
 தொடுத்திடும் கணையென அடுத்தடுத் திருந்து
 |  | 
                  |  | விடுத்தனர் வினாக்கள் வெருவிலள் பூங்கொடி; | 20 | 
                  |  | 
                  | பிறமொழி வெறுப்பென்பார்க்குப் பூங்கொடி மறுப்பு | 
                  |  | 
                  |   | `பிறமொழி வெறுத்தல் பேதைமை யாகும் அறமன முடையோர் அவ்வணம் செய்யார்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | தரியலர் - பகைவர், அழிப்பான் - அழிக்க, பாவைகள் - பொம்மைகள்,           மலையும் - தகராறுசெய்யும், உய்யும் - பிழைக்கும். |  | 
                  |  |  |  |