| 1. விழாவயர் காதை | 
                  | தமிழகச் சிறப்பு | 
                  |  | 
                  |   | அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும்
 நாவலந் தீவின் நாடியாய் விளங்கும்
 பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம்
 |  | 
                  |  | மேவலர் அணுகா வீரங் கெழுமிய | 5 | 
                  |  | காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது;
 சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப்
 பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு;
 |  | 
                  |  | `யாதும் ஊரே யாவரும் கேளிர்'என் | 10 | 
                  |  | றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை
 தருவது தொழிலாத் தான்கொண் டதுவே;
 |  | 
                  |  |  |  | 
                  |  | பொங்கல் வந்தது |  | 
                  |  |  |  | 
                  |  | அயலவர் மொழிக்கெலாம் ஆளுகை தருதல் |  | 
                  |  | தவறென உணரார் தாய்மொழி ஈங்குச் | 15 | 
                  |  | சிறுகச் சிறுகச் சீரிழந் தேகுதல் அறியக் காணார் அயர்ந்தனர்; அந்நாள்
 பொங்கல் நாளெனும் மங்கலத் திருநாள்
 எங்கணும் மகிழ்ச்சி இலங்கிட வந்தது;
 |  | 
                  |  |  |  | 
                  |  | அறிக்கை விடுதல் |  | 
                  |  |  |  | 
                  |  | கட்சி சமயங் கருதிடா நல்லோர் | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | உடீஇய - உடுத்த, மேவலர் - பகைவர், கெழுமிய - பொருந்திய,           கோலோச்சியது - செங்கோல் செலுத்தியது, நிறீஇ - நிறுவி, கேளிர் - உறவினர்,           ஆளுகை - ஆட்சி, இலங்கிட - விளங்கிட. |  | 
                  |  |  |  |