| | நச்சி ஒருசிலர் நாட்டு மக்கட்கு ஆய்ந்து வரைந்ததோர் அறிக்கை அனுப்பினர்; | |
| | | |
| | விழாக் கொண்டாடுக | |
| | | |
| | `தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் | |
| | உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் | 25 |
| | சளைப்பிலா முயற்சி தருபயன் பெற்றுப் புதுமை இன்பம் பூணும் நன்னாள் இதுவே பெருவிழா எனக்கொண் டாடுக; ஆங்காங் குறையுநர் அயலவர் பண்புகள் | |
| | நீங்கிய திருநாள் நினைந்திதைப் பேணுக; | 30 |
| | பிறபிற பண்புகள் பேணிய போதும் நமக்கென மொழியும் நாளும் உளவென உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்; | |
| | | |
| | நகரை அணிசெய்க | |
| | | |
| | பலவகைத் தோரணம் பாங்குடன் நாற்றுமின் | |
| | வளர்குலைக் கமுகும் வாழையுங் கட்டுமின் | 35 |
| | கிளரொளி மாடங் கிளைபடு குடிசை யாங்கணும் யாங்கணும் ஓங்குக இன்பம்; | |
| | | |
| | ஒற்றுமை பரப்புக | |
| | | |
| | எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் | |
| | மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே | 40 |
| | வழியெனக் கருதி வழங்குக பேருரை; முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிந்தைவிட் டகற்றுக ஓரினம் நாமென உன்னுக பெரிதே; | |
| --------------------------------------------------------------- |
| | நாற்றுமின் - தொங்கவிடுவீர். யாண்டும் - எங்கும், உன்னுக - நினைக. | |
| | | |