| 31. விடுதலைக் காதை | 
                  |  | 
                  | சிறையும் விடுதலை வீரரும் | 
                  |  |  |  | 
                  |  | கருங்கற் சுவரும் இரும்பின் கம்பியும் திருந்திய நெஞ்சகம் பொருந்திய உணர்ச்சியைப்
 பிரித்திட வல்ல பெற்றிமை யுற்றவோ?
 குறித்தநற் கொள்கையர் கொடுஞ்சிறைக் கொட்டிலுட்
 |  | 
                  |  | கிடப்பினும் நாடும் கிளர்ந்தெழும் அவரும் | 5 | 
                  |  | தனித்தனி பிரிந்திடத் தகுவரோ? விடுதலை வேட்டெழும் வீரர்தம் ஏட்டினில் அந்நிலை
 காட்டுதல் கூடுமோ? கேட்டதும் இல்லை;
 பூங்கொடி யுளத்துப் பூத்துநல் லார்வம்
 |  | 
                  |  | யாங்ஙனம் அகலும்? ஓங்கி வளர்ந்தது, | 10 | 
                  |  | 
                  | பூங்கொடி புலம்பல் | 
                  |  |  |  | 
                  |  | இனிமை மிகுதமிழ் இயம்பும் வாயினள் தனிமை தருதுயர் தாங்கி யிருப்பவள்,
 நனிமிகும் உணர்வொடு நவின்றனள் இவையிவை,
 `முன்னர் ஒருநாள் மூடிய சிறையுள்
 |  | 
                  |  | தன்னந் தனியாய் இன்னலிற் கிடந்தேன் | 15 | 
                  |  | செய்யாப் பழியைச் செய்தேன் என்று பொய்யாற் சிறையுட் புகுத்தினர் கவன்றேன்;
 இன்றென் தாய்மொழி இடுக்கண் துடைத்திடும்
 நன்றமர் நடாத்தி நானிலம் அறியச்
 |  | 
                  |  | சென்று புகுந்தேன் சிறையகம் அதனால் | 20 | 
                  |  | ஒன்றும் மகிழ்வால் உளங்களிக் கின்றேன்; |  | 
                  |  |  |  | 
                  |  | உரிமை பெறுமுன் இறவேன் |  | 
                  |  |  |  | 
                  |  | நன்று புரிவோர் நலிவுறல் இயல்போ? தூய்தமிழ் வாழத் தொண்டுகள் புரிந்தேன்,
 தாய்மொழி வளரத் தந்தேன் வாழ்வு,
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | ஒன்றும் - பொருந்தும். |  | 
                  |  |  |  |