| 3. பூங்கா புக்க காதை | 
                  | பூங்கொடி அழுகை | 
                  |  | 
                  |   | தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும்
 பூங்கொடி செவியிற் புகுந்தது; புகுதலும்
 ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி
 |  | 
                  |  | படபடத் தாலெனப் பதைத்தனள் நெஞ்சம்; மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக்
 கடமை யாற்றுழிக் கைதவ மாந்தரால்
 பெற்றோ ரீங்குப் பட்டவெந் துயரால்
 உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி
 | 5 | 
                  |  | வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது; கண்ணீ ரிடைவிரி கருவிளை மலரென
 எண்ணும் படிக்கிரு கண்களும் இலங்கின;
 சுமையாய்த் துயரம் சுமந்திடற் கியலா
 அமயத் திருப்போர் அழுதிடல் இயல்பே;
 | 10 | 
                  |  | அழுதிடல் ஏனெனின் அப்பெருந் துயரைக் கழுவும் ஆற்றல் கண்ணீர்க் குளதென
 நம்புவர்; அதனால் நலிவுங் குறைகுவர்;
 பூங்கொடி தனக்கோ பொங்கிய துயரம்
 நீங்கிற் றிலது நெஞ்சம் விம்மத்
 | 15 | 
                  |  | தேம்பித் தேம்பித் தெரிவை அழுதனள்; | 20 | 
                  |  |  |  | 
                  | பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி கண்ணீர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | ஆன் - பசு, அருட்பா - திருவருட்பா, பெருவளி - பெருங்காற்று,           கொளீஇ - கொண்டு, கைதவம் - வஞ்சகம், உள் - மனம். |  | 
                  |  |  |  |