| | கண்ணீர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, `ஏனோ கலங்கினை? | |
| | மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே | 25 |
| | தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு; நாமே கலங்குதல் நன்றோ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக கவலை | |
| | அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும்; | 30 |
| | | |
| | பூம்பொழில் தந்திடும் ஐம்புல இன்பம் | |
| | | |
| | பலர்முகம் கண்டும், பாட்டொலி கேட்டும், சிறுவர் ஆடிடும் சிரிப்பொலி கேட்டும், நறுநீர் அருந்தி நளிகனி உண்டும், மலர்மணம் நுகர்ந்தும், வருசிறு தென்றல் | |
| | தளிருடல் வருடித் தருநலம் பெற்றும் | 35 |
| | களிமிகு மனத்தொடு திரும்'பெனக் கழறினள்; | |
| | | |
| | பூங்கொடியின் அழகு | |
| | | |
| | உடனுறை தோழி அல்லி உரைப்போள் `பூங்கொடி நல்லாள் பொற்பின் செல்வி, தேங்கெழில் இளமை செறிதரு சிற்பம், | |
| | சிற்றிடை கொடியைச் சிரிக்கும், பிறையெனும் நெற்றியிற் புருவம் வில்லினை நிகர்க்கும், அவ்வில் லடியில் அம்பென இருவிழி செவ்விதின் நிற்கும், செவ்வா யிதழில் புன்னகை மின்னும், பொலிவுறச் சுருள்படு | 40 |
| | பின்னலில் இணையாப் பிரிந்துள கருங்குழல் | 45 |
| --------------------------------------------------------------- |
| | குறுகி - நெருங்கிச்சென்று, ஈண்டு - இங்கு, அவலம் - பெருந்துயர், நளிகனி - குளிர்ந்தகனி, கழறினள் - சொல்லினள், பொற்பு - அழகு, பொலிவு - அழகு. | |
| | | |