|             |                               அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்           முத்தக் கூத்தன் கல்லறை முன்போய் |             |         
                  |             |                               நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும்,            குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்           பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!           நாடும் மொழியும் நலம்பெற வேண்டிக்           கூடும் நீவிர் கூத்தன் செயற்றிறம் |           70 |         
                  |             |                               பூணுதல் வேண்டும் பூவையீர்! ஆதலிற்            காணுதல் வேண்டுமக் கல்லறை' என்றனள்; |           75 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          முத்தக் கூத்தன் வரலாறு கூறுதல்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               `நல்வழி புகன்றோய்! நன்றி யுடையேம்           கல்லறை புகுந்த காளைதன் திறம்எமக்கு           அருளுதல் வேண்டும் ஆயிழை' எனலும், |             |         
                  |             |                               `பிறைநுதல் நல்லீர்! பெட்புடன் கேண்மின்! |           80 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          பிறமொழி புகுதல்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               நம்நாட் டகத்தே நயமிலாப் புன்மொழி           திணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;           துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;           தாய்மொழி வளர்ச்சி தளர்ந்தஇந் நாட்டில் |             |         
                  |             |                               நோய்என மடமை நுழைந்து பரந்தது;           எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்           கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றோ?           என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்; |           85 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          நெஞ்சங் கனன்றது  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               கன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர் |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |             |                               குருதி - இரத்தம், பிறக்கிட - புறமுதுகிட, பூவையீர் - பெண்களே,           காளை - முத்தக்கூத்தன், ஆயிழை - தாமரைக்கண்ணி, கேண்மின் - கேளுங்கள்,           துணுக்குற்று - அச்சமுற்று. |             |         
                  |   |             |             |