|             |                               பொறுக்கும் அளவே பொறுப்பர்; மீறின்            ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்           நினைவர்; இதுதான் நெடுநாள் இயல்பு;           கனலும் புனலும் கரைமிகின் தடுக்க           உலகில் ஒருபொருள் உளதென அறியோம்; |           90 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          மான வுணர்ச்சி  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               மூக்கினை வருடின் மூங்கையும் சினப்பான்;           காக்கும் உயிரினும் மேம்படு கனிமொழி           தாய்மொழி யதனைத் தகவிலார் குழுமி           ஆய்வஞ் சனையால் அழிக்க முனையின்           ஊமையிற் கீழாய் உறங்கிக் கிடப்பரோ? |           95 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          அறப்போர்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               போர்ப்படை திரண்டது போர்ப்பறை ஆர்த்தது;           கோற்படை வீரரைக் குவித்தனர் அரசினர்;           அஞ்சிலர் நெஞ்சில் ஆண்மை ஏறினார்           வஞ்சினம் சாற்றினர் வாகை சூடவே;           மானம்மீக் கூர்ந்தவர் மறியல் செய்தனர்; |           100 |         
                  |             |                               கூனல் நெஞ்சினர் கொடுங்கோல் செலுத்தினர்;           அடித்தனர் துரத்தினர், அடவி நாப்பண்           துடித்திடக் கொண்டுபோய் விடுத்தனர்; புலிவாய்           தப்பிப் பிழைத்துத் தாய்மார் பல்லோர்           அப்பணி மீண்டும் ஆற்றினர்; அவர்தமைக் |           105 |         
                  |             |                               கொடுஞ்சிறைக் கூட்டுள் கொடுங்கோல் அடைத்தது; |           110 |         
                  |             |                                 |             |         
                  |             |                                          குருதி சிந்தினர்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக் |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |             |                               கனல் - தீ, புனல் - நீர், கரைமிகின் - எல்லை கடந்தால், மூங்கை           - ஊமை, கோற்படை - ஊர்காவலர், மீக்கூர்ந்தவர் - மேம்பட்டவர், கூனல் - குறுகிய,           அடவி - காடு, நாப்பண் - நடுவில். |             |         
                  |   |             |             |