|               |                               பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர்,           தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர்,           பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி |             |         
                  |   |                                         ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால் |                     70 |         
                  |   |                                         விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித்           துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும்           இடையறா தருவி இழிதரல் மான           நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை |             |         
                  |   |           			                        பொழிந்தனள்; மக்கள் புதுமழை கண்டு |           75 |         
                  |   |                                         விளைந்தெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர்,           குளிர்ந்தனர் நெஞ்செலாம், கொடும்அறி யாமைக்           களைகளைந் தெறிந்தனர், கருத்தினில் அடிமைத்           தளைகள் தறிந்தனர், விடுதலை தாங்கினர்; |             |         
                  |   |         
                  |                                அரங்கின் தோற்றம்  |         
                  |   |         
                  |             |                               மக்கட் பரப்பு வான்கடற் பரப்பென |           80 |         
                  |   |                                         மிக்குக் கிடந்தது, மேடைஓர் மரக்கலம்           போல விளங்கிப் பொலிந்தது, பூங்கொடி           மாலுமி என்ன மதர்த்து நின்றனள்,           கயல்புலி விற்கொடி கப்பற் கொடிபோல் |                       |         
                  |   |                                         உயர்வான் மிசையே ஓங்கிப் பொலிந்தது, |           85 |         
                  |   |                                         அலையிடை மணியென ஆங்காங் கவிரொளி           நிலைவிளக் கெரிந்து நீளொளி பரப்பின,           எங்கணும் அமைதி இலங்க ஐம்பொறி           பொங்கும் உணர்வெலாம் புதியதோர் உணர்வாய்க் |             |         
                  |   |                                         குவிந்தன மேடையில்; குள்ள நரிச்செயல்  |           90 |         
                  |   |                                         பொதிந்த நெஞ்சினர் பொல்லாங் கிழைத்தனர்; |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                                         துளக்கம் - நடுக்கம், இழிதரல் - இறங்குதல், மான - போல,           சொன்மழை - சொற்பொழிவு, விம்மிதம் - பெருமிதம், தறிந்தனர் - அறுத்தனர்,           மதர்த்து - பெருமிதமுற்று. |             |         
                  |   |             |             |