|                                சிறியர் செய்கை  |         
                  |   |         
                  |             |                               கற்களை வீசினர் காரிருள் இடைநின்           றற்பச் செயலென அறியார்; அறிஞர்           நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசை |             |         
                  |   |                                         விஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் |                     95 |         
                  |   |                                         புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள்           புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்           கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்           மதியோர் செயலினை மானும்; அந்தோ! |             |         
                  |   |           			                          |             |         
                  |   |           			                                     பூங்கொடியின் கனன்றுரை  |             |         
                  |   |           			                          |             |         
                  |   |           			                        கற்கள் வீழலும் கண்கள் சிவந்தனள் |           100 |         
                  |   |           			                        `எற்கெனை அழைத்தீர் இகழ்வதற் கோ?'என             நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர்             சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்;             கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்; |             |         
                  |   |           			                        பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் |           105 |         
                  |   |                                         உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை;           `சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்!           ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமை           கேடுறல் நன்றோ? கிளைபோல் வருமொழி |             |         
                  |   |                                         பீடுறல் கண்டும் பேதமை பூணல் |           110 |         
                  |   |                                         மாண்பன் றென்றேன், மடமைச் சேற்றில்           வீழ்ந்து மடிதல் வேண்டா என்றேன்,           தாழ்வும் இழிவும் சாதியில் வேண்டா!           குலமும் தேவும் ஒன்றெனக் கொள்க; |             |         
                  |   |                                         நலந்தரும் இவைஎன நவின்றேன், ஈண்டை |           115 |         
                  |   |                                         ஏற்போர் உளரேல் ஏற்று வாழ்க!           ஏலா ராயின் இவணின் றொழிக! |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                                         கார் - கருமை, எற்கு - எதற்கு, நுவன்றனள் - சொல்லினள், சாற்றுவென்           - சொல்லுவேன், ஆன்ற - நிறைந்த, கிளை - உறவு, பீடு - பெருமை, தேவு - தெய்வம்,           உளரேல் - இருப்பாராயின். |             |         
                  |   |             |             |