| 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை |
| குறளுரை பரப்புதல் |
| |
| | நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின் சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்; கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர், | |
| | இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் | 5 |
| | | |
| | தாமரைக்கண்ணி வருகை | |
| | | |
| | தாமரைக் கண்ணி தந்தனள் வருகை; காமரு பூங்கொடி கடிதின் எழீஇத் தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇ நீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழி | |
| | கூறா நின்றனள்; கூறிய நங்கையை | 10 |
| | ஆரத் தழுவி அப்பெரு மாட்டி வீரத் திருமகள் வாழிய என்றனள்; | |
| | | |
| | பூங்கொடி வினவல் | |
| | | |
| | `ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்? அன்னையும் தோழியும் என்பிரி வாற்றி | |
| | நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? | 15 |
| | உரையாய் தாயே' என்னலும் `உன்னைத் | |
| | | |
| | தாமரைக்கண்ணி மறுமொழி அருண்மொழி நிலைமை | |
| | | |
| | திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித் தனியே விடுத்ததால் தையலர் இயல்பான் நனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச் | |
| --------------------------------------------------------------- |
| | காமரு - அழகுமிக்க, கடிதின் - விரைவில், எழீஇ - எழுந்து, தழீஇ - தழுவி, துன்னினர் - அமைந்தனர், திரை - அலை, திருத்துவான் - திருத்த. | |
| | | |