| 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை | 
                  | குறளுரை பரப்புதல் | 
                  |  | 
                  |   | நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின் சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு
 உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;
 கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,
 |  | 
                  |  | இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் | 5 | 
                  |  |  |  | 
                  |  | தாமரைக்கண்ணி வருகை |  | 
                  |  |  |  | 
                  |  | தாமரைக் கண்ணி தந்தனள் வருகை; காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்
 தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇ
 நீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழி
 |  | 
                  |  | கூறா நின்றனள்; கூறிய நங்கையை | 10 | 
                  |  | ஆரத் தழுவி அப்பெரு மாட்டி வீரத் திருமகள் வாழிய என்றனள்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி வினவல் |  | 
                  |  |  |  | 
                  |  | `ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்? அன்னையும் தோழியும் என்பிரி வாற்றி
 |  | 
                  |  | நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? | 15 | 
                  |  | உரையாய் தாயே' என்னலும் `உன்னைத் |  | 
                  |  |  |  | 
                  |  | தாமரைக்கண்ணி மறுமொழிஅருண்மொழி நிலைமை
 |  | 
                  |  |  |  | 
                  |  | திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித் தனியே விடுத்ததால் தையலர் இயல்பான்
 நனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | காமரு - அழகுமிக்க, கடிதின் - விரைவில், எழீஇ - எழுந்து, தழீஇ           - தழுவி, துன்னினர் - அமைந்தனர், திரை - அலை, திருத்துவான் - திருத்த. |  | 
                  |  |  |  |