11. ஏடு பெற்ற காதை |
பொழிலில் பூங்கொடி |
|
| தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்த் தோமறு தமிழ்க்குத் தொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள் பொழில்நலங் காணும் விழைவினள் செல்வுழி, | |
| | |
| மூதாட்டி வருகை | |
| | |
| மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி | 5 |
| நரைமூ தாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள், அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே | |
| எதிர்ப்பட் `டாயிழாய் யார் நீ?' எனலும், | 10 |
| | |
| பூங்கொடி தன் வரலாறு கூறல் | |
| | |
| `முதிர்பரு வத்தாய்! மொழிகுவென் கேளாய்! உலகந் தோன்றி ஊர்ந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துப் பேசிய மொழியாம் வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந் | |
| தறிவொளி விளங்க ஆற்றினர் தந்தை; | 15 |
| குருடு படுமதிக் குழுவினர் சதியால் மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி ஈன்ற மகள்யான் என்பெயர் பூங்கொடி, | |
| | |
| இல்லறம் தவிர்ந்தமை கூறல் | |
| | |
| தனித்தொரு மகள்இத் தரணியில் வாழ | |
| நினைத்தல் பலபிழை நிகழ்வதற் கேதென | 20 |
| உலகம் மொழிதல் உண்மையே யாயினும் | |
--------------------------------------------------------------- |
| தவிர்ந்த - நீங்கிய, புரை - குற்றம், ஆயிழாய் - பூங்கொடி, ஆற்றினர் - செய்தனர். | |
| | |