பக்கம் எண் :

பக்கம் : 77

11. ஏடு பெற்ற காதை

பொழிலில் பூங்கொடி

 

 

தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்த்
தோமறு தமிழ்க்குத் தொண்டுகள் ஆற்றப்
பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள்
பொழில்நலங் காணும் விழைவினள் செல்வுழி,
 
     
 

மூதாட்டி வருகை

 
     
  மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி 5
  நரைமூ தாட்டி நல்லன எண்ணிப்
புரையறு செயலே புரிவது காட்டும்
முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள்,
அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே
 
  எதிர்ப்பட் `டாயிழாய் யார் நீ?' எனலும், 10
     
 

பூங்கொடி தன் வரலாறு கூறல்

 
     
  `முதிர்பரு வத்தாய்! மொழிகுவென் கேளாய்!
உலகந் தோன்றி ஊர்ந்து வளர்ந்து
பிள்ளைப் பருவத்துப் பேசிய மொழியாம்
வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந்
 
  தறிவொளி விளங்க ஆற்றினர் தந்தை; 15
  குருடு படுமதிக் குழுவினர் சதியால்
மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி
ஈன்ற மகள்யான் என்பெயர் பூங்கொடி,
 
     
 

இல்லறம் தவிர்ந்தமை கூறல்

 
     
  தனித்தொரு மகள்இத் தரணியில் வாழ  
  நினைத்தல் பலபிழை நிகழ்வதற் கேதென 20
  உலகம் மொழிதல் உண்மையே யாயினும்  

---------------------------------------------------------------

  தவிர்ந்த - நீங்கிய, புரை - குற்றம், ஆயிழாய் - பூங்கொடி, ஆற்றினர் - செய்தனர்.