| | படம்விரி யரவுக்குப் பசுப்பால் வார்த்தோம்! உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்! | |
| |
| மனத்துயரம் |
| |
| | அச்சகத் தொழிலோன் அவன்மனை யாட்டி | |
| | மகப்பெறு நிலையில் மிகப்பெருந் துயரால் | 100 |
| | வருந்துதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத் திருந்த முடித்து வரும்பொருள் பெற்று வீடு செல்ல விழைந்தவன் எடுக்கக் கூடும் எழுத்துக் குலைந்து சிதறி | |
| | வீழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல | 105 |
| | என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்; | |
| |
| இருபெருஞ் சுவடிகள் |
| |
| | கூத்தும் இசையும் கூறும் இருநூல் ஏத்தும் படியாய் என்விழிப் பட்டன; வாழ்த்துக் கூறி மகிழ்ந்தவை புரட்டினேன்; | |
| | நெருப்பாற் புண்படு நெஞ்சம் வேதுபெற் | 110 |
| | றிருப்பது போல இன்பம் விளைந்தது; இசையும் கூத்தும் தமிழில் இலைஎனும் வசைமொழி கூறி வருவோர் மடமை தொலைக்கஇவ் விருநூல் துணைசெயும் எனநான் | |
| | விலைக்குப் பெற்றவ் வேடுகள் கொணர்ந்தேன்; | 115 |
| | | |
| | மூதாட்டி சுவடிகள் தருதல் | |
| | | |
| | நானிவை பிரித்துப் பயிலும் நாளில் மீனவன் என்னும் மேலோன் கையன இந்நற் சுவடிகள் என்ப துணர்ந்தேன்; மின்னற் கொடியே! மிகுபயன் தருமிவ் | |
| | வேடுகள் நின்பால் இருந்திடல் நலமாம்; | 120 |
| | கூடிய ஆண்டெனைக் கூடிய ததனால் இவைநீ கைக்கொண் டியற்றுக நற்பணி; | |
| --------------------------------------------------------------- |
| | அரவு - பாம்பு, கையன - கையிலிருந்தன. | |
| | | |