| | வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக! இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாது வசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை! திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின் | |
| | இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! | 125 |
| | நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ? இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித் தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ'என, | |
| | | |
| | அடிகளார் வாழ்த்து | |
| | | |
| | ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை; | |
| | `தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! | 130 |
| | ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க! வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின் தொண்டு! வாழ்கபல் லாண்'டென வாழ்த்தினர் அவரே; அருண்மொழி அன்னையும் அல்லியும் அடிகள் | |
| | தருவிடை பெற்றுத் தனியே கினரே. | 135 |
| -------------------------------------------------------------------------------- |
| | வாளா - செயலின்றி | |
| | | |